Questions 11 – 20 with answers available
11. தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக விளங்குவது எது?
1. கம்பராமாயணம்
2. அகத்தியம்
3. நாலடியார்
4. ஏலாதி
விடை – அகத்தியம்
12. திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது?
1. திருவிளையாடற்புராணம்
2. நாலாயிர திவ்வியப்பிரபந்தம்
3. முத்தொள்ளாயிரம்
4. திருவாய்மொழி
விடை – திருவாய்மொழி
13. ”ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே”
இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
1. புறநானூறு
2. குறுந்தொகை
3. திரிகடுகம்
4. நன்னூல்
விடை – நன்னூல்
14. தமிழ்த்தூதர் என அழைக்கப்படுபவர் யார்?
1. ஒட்டக்கூத்தர்
2. ஔவையார்
3. தனிநாயகம் அடிகள்
4. கபிலர்
விடை – தனிநாயகம் அடிகள்
15. நாச்சியார் திருமொழி யாரால் பாடப்பெற்றது?
1. ஆண்டாள்
2. திருமூலர்
3. சுந்தரர்
4. சீத்தலைச்சாத்தனார்
விடை – ஆண்டாள்
16. சேர்த்து எழுதுக. நன்மை அறிஞர்
1. நல்லறிஞர்
2. நன்மை அறிஞர்
3. நன்மையறிஞர்
4. நல்ல அறிஞர்
விடை – நல்லறிஞர்
17. செயப்பாட்டு வினை வாக்கியத்தை கண்டறிக.
1. வேலன் மரத்தை வெட்டினான்
2. மரம் வேலனால் வெட்டப்பட்டது
3. வேலன் மரத்தை வெட்டு
4. மரம் வேலனால் வெட்டு
விடை – மரம் வேலனால் வெட்டப்பட்டது.
18. குற்றால மலையின் அழகு தான் என்னே
வாக்கிய வகையினைக் குறிப்பிடுக.
1. கலவை வாக்கியம்
2. வினா வாக்கியம்
3. உணர்ச்சி வாக்கியம்
4. தொடர் வாக்கியம்
விடை – உணர்ச்சி வாக்கியம்
19. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
நாட்டின் வளத்துக்கு காடுகளே அடிப்படை
1. காடுகளின் பயன் யாது?
2. நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?
3. காடுகள் அடிப்படையாக எதற்கு அமைகிறது?
4. காடுகள் நாட்டுக்கு அவசியமானதா?
விடை – நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?
20. பொருந்தாதச் சொல்லைக் காண்க.
1. வாய்மை
2. மெய்மை
3. உண்மை
4. நன்மை
விடை – நன்மை
0 comments:
Post a Comment